ரஜினி அரசியல்வாதிகளை எதிர்த்து, ஜெயலலிதா மரணத்திற்கு முன்பு பேசியது
கிடையாது, அவர் ஒரு கோழை என்று சில தற்குறிகள் அடிக்கடி வந்து தொந்தரவு
செய்கிறார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது. இது எனக்கு தெரிந்த வரை
மட்டுமே !! நான் எதையாவது பதிவு செய்யாமல் விட்டு இருந்தால் நண்பர்கள்
கமண்ட் செய்யலாம்.
1) இதற்குமேல் கர்நாடாகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால், என்னுடைய ரசிகர்களை அங்கு கூட்டி வந்து போராட்டம் செய்வேன் - 1992 காவிரி பிரச்சனையின் போது
2) தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது ( செல்வி.ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து, அதிமுக அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு - 1995 மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வெடித்தபோது )
3) திரைப்பட நகருக்கு உங்களுடைய பெயர் வைத்தது மிக பெரிய தவறு. எம்.ஜி.ஆர் பெயரை வைத்து இருக்க வேண்டும்( 1995 ஆம் ஆண்டு , சிவாஜி கணேசனின் பாராட்டு விழாவில், செல்வி.ஜெயலலிதாவை மேடையில் இருக்கும் பொழுது கூறியது. அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் அது எம்.ஜி.ஆர் திரைப்பட நகர் என்று மாற்றப்பட்டது.
4) மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது
5) டாக்டர்.ராமதாஸ் வன்முறைகளின் ராஜாவாக திகழ்கிறார் - 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது.
6) "விஜயகாந்த் கலக்கி இருக்கீங்க . நல்ல ஓட்டு வாங்கி இருக்கீங்க . உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" ( 2006 - சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில், அப்போதைய முதல்வர் கலைஞரை வைத்துக்கொண்டு மேடையில் கூறியது. பல நடிகர்கள் விஜயகாந்தை போய் பார்த்து வாழ்த்து தெரிவித்தது, அவர் 2011 இல் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்புதான் என்பது குறிப்பிடத்தக்கது)
7) கலைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்து. ஒன்று திமுக என்ற சொத்து. இன்னொன்று அழகிரி, ஸ்டாலின். இந்த சொத்து அந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். அந்த சொத்து இந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். (அழகிரி, ஸ்டாலின் இடையே நடக்கும் பனிப்போரை, அவர்கள் ஒத்துமொத்த குடும்பத்தையும் வைத்துக்கொண்டு 2010 ஆம் ஆண்டு அழகிரி அவர்கள் மகன் திருமணத்தின்போது கூறியது)
8) 2010 ஆம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில், அஜித் குமார் பேசிய சில தைரியமான கருத்துகளுக்கு தலைவர் அவர்கள் முதல்வர் அருகிலேயே எழுந்து கை தட்டினார் . அது மட்டும் இல்லாமல் அஜித்தின் பேச்சிற்கு ஆதரவு கூறினார். அதே நிகழ்ச்சியில் அரசு கொடுக்கும் இலவசங்களுக்கு எதிராக பேசினார். அதுமட்டுமல்லாமல், "அரசு ஒதுக்கிய இந்த நிலம் ஏழை தொழிலளர்களுக்கு போய் சேர வேண்டும் . இதை யாரும் ஏமாற்ற கூடாது. “உண்மையை பேசுறதுல, சத்தியம் பேசுறதுல நான் யாருக்கும் எவனுக்கும் பயப்படமாட்டேன். என் மனசுக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன்". என்று அரசாங்கத்தில் நடக்கும் ஊழலை முதல்வர் கலைஞரை வைத்துக் கொண்டு தைரியமாக பேசினார். ஆனால் கலைஞர் தொலைக்காட்சியோ அஜித் பேசியதை மட்டும் இல்லாமல் , ரஜினி மேற்கொண்டு கூறிய வார்த்தைகளையும் எடிட் செய்து ஒளிபரப்பியது .
9) 30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் போராட்டத்தை, சகல படை பலம் வசதிகளும் கொண்ட உன்னால ஒழிக்க முடியலேன்னா... என்ன வீரர்கள் நீங்கள்? ஆம்பளைங்களா நீங்க...? ( 2009 - ஆம் ஆண்டு இலங்கை அரசை கண்டித்து பேசியது. இதற்கு முன்பு சத்தியமாக எந்த ஒருவரும் இப்படி ஒரு நாட்டைப் பார்த்து ஆம்பளைங்களா நீங்க...?’ என்று கேள்வி கேட்டதாக தெரிய வில்லை )
10) வெளிய மக்கள் மழை வெள்ளத்தினால் அவஸ்தை படுறாங்க !!! இந்த நிகழ்ச்சியை சீக்கிரமா முடிச்சிங்கனா, முதல்வர் அதை போய் கவனிப்பாங்க !!! ( 2010 ஆம் ஆண்டு இளைஞன் இசை வெளியீட்டு விழாவில் அப்பொழுதைய முதல்வர் கலைஞரை வைத்துக்கொண்டு )
11) பொன்னர் ஷங்கர் இசைவெளியீட்டு விழாவில் முதல் நாள் கலைஞருடன் கலந்து கொண்டு விட்டு, மறுநாள் 2011 ஆம் ஆண்டு பொது தேர்தலில், அதிமுகவிற்கு ஓட்டு போட்டார் ரஜினி . ( அவர் யாரிடம் வேண்டுமானால் நெருக்கமாக இருப்பார். ஆனால் அதற்காக அவர்களுக்குதான் அவர் ஆதரவு தருவார் என்று நீங்கள் நினைப்பதில் அர்த்தமில்லை).
12) 2013 ஆம் ஆண்டு, தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா அவர்களை வைத்துக்கொண்டு கலைஞரை புகழ்ந்தார். அவர் பேசியது , " இந்த நேரத்துல நலிந்த கலைஞர்களுக்கு இடஒதுக்கீடு செய்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
13) 2008 ஆம் ஆண்டு ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆதரித்து பேசும் பொழுது, கர்நாடாகாவில் பிரச்னையில் ஈடுபடுவோரை உதைக்க வேண்டும் என்று கூறினார்( பிறகு இதற்கு வருத்தம் தெரிவித்தார்). கர்நாடகாவில் இருந்து மும்பை சென்ற ஒருவர், அநாகரிகமாக பேசுவதாக கண்டித்தார். ( அப்பொழுது மும்பையின் கவர்னராக இருந்த S.M. கிருஷ்ணாவை குறிப்பிடுகிறார்)
இதற்கு முன்பு இந்திய அளவில், சினிமா துறையில் உள்ள ஒருவர், இப்படி முதலமைச்சர்களுக்கு எதிராகவும், அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து இருக்கிறார் என்று உங்களால் கூற முடியுமா?? அதுதான் ரஜினி. ஆதலால், அவர் இதற்கு முன்பு யாரையும் எதிர்த்து பேசியது இல்லை என்று கூறுவதை விட்டுவிட்டு, உங்களது பொழைப்பை பார்த்தால் நன்றாக இருக்கும்.
இப்படிக்கு,
அ.அருள்செல்வன்
1) இதற்குமேல் கர்நாடாகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால், என்னுடைய ரசிகர்களை அங்கு கூட்டி வந்து போராட்டம் செய்வேன் - 1992 காவிரி பிரச்சனையின் போது
2) தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது ( செல்வி.ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து, அதிமுக அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு - 1995 மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வெடித்தபோது )
3) திரைப்பட நகருக்கு உங்களுடைய பெயர் வைத்தது மிக பெரிய தவறு. எம்.ஜி.ஆர் பெயரை வைத்து இருக்க வேண்டும்( 1995 ஆம் ஆண்டு , சிவாஜி கணேசனின் பாராட்டு விழாவில், செல்வி.ஜெயலலிதாவை மேடையில் இருக்கும் பொழுது கூறியது. அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் அது எம்.ஜி.ஆர் திரைப்பட நகர் என்று மாற்றப்பட்டது.
4) மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது
5) டாக்டர்.ராமதாஸ் வன்முறைகளின் ராஜாவாக திகழ்கிறார் - 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது.
6) "விஜயகாந்த் கலக்கி இருக்கீங்க . நல்ல ஓட்டு வாங்கி இருக்கீங்க . உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" ( 2006 - சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில், அப்போதைய முதல்வர் கலைஞரை வைத்துக்கொண்டு மேடையில் கூறியது. பல நடிகர்கள் விஜயகாந்தை போய் பார்த்து வாழ்த்து தெரிவித்தது, அவர் 2011 இல் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்புதான் என்பது குறிப்பிடத்தக்கது)
7) கலைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்து. ஒன்று திமுக என்ற சொத்து. இன்னொன்று அழகிரி, ஸ்டாலின். இந்த சொத்து அந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். அந்த சொத்து இந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். (அழகிரி, ஸ்டாலின் இடையே நடக்கும் பனிப்போரை, அவர்கள் ஒத்துமொத்த குடும்பத்தையும் வைத்துக்கொண்டு 2010 ஆம் ஆண்டு அழகிரி அவர்கள் மகன் திருமணத்தின்போது கூறியது)
8) 2010 ஆம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில், அஜித் குமார் பேசிய சில தைரியமான கருத்துகளுக்கு தலைவர் அவர்கள் முதல்வர் அருகிலேயே எழுந்து கை தட்டினார் . அது மட்டும் இல்லாமல் அஜித்தின் பேச்சிற்கு ஆதரவு கூறினார். அதே நிகழ்ச்சியில் அரசு கொடுக்கும் இலவசங்களுக்கு எதிராக பேசினார். அதுமட்டுமல்லாமல், "அரசு ஒதுக்கிய இந்த நிலம் ஏழை தொழிலளர்களுக்கு போய் சேர வேண்டும் . இதை யாரும் ஏமாற்ற கூடாது. “உண்மையை பேசுறதுல, சத்தியம் பேசுறதுல நான் யாருக்கும் எவனுக்கும் பயப்படமாட்டேன். என் மனசுக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன்". என்று அரசாங்கத்தில் நடக்கும் ஊழலை முதல்வர் கலைஞரை வைத்துக் கொண்டு தைரியமாக பேசினார். ஆனால் கலைஞர் தொலைக்காட்சியோ அஜித் பேசியதை மட்டும் இல்லாமல் , ரஜினி மேற்கொண்டு கூறிய வார்த்தைகளையும் எடிட் செய்து ஒளிபரப்பியது .
9) 30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் போராட்டத்தை, சகல படை பலம் வசதிகளும் கொண்ட உன்னால ஒழிக்க முடியலேன்னா... என்ன வீரர்கள் நீங்கள்? ஆம்பளைங்களா நீங்க...? ( 2009 - ஆம் ஆண்டு இலங்கை அரசை கண்டித்து பேசியது. இதற்கு முன்பு சத்தியமாக எந்த ஒருவரும் இப்படி ஒரு நாட்டைப் பார்த்து ஆம்பளைங்களா நீங்க...?’ என்று கேள்வி கேட்டதாக தெரிய வில்லை )
10) வெளிய மக்கள் மழை வெள்ளத்தினால் அவஸ்தை படுறாங்க !!! இந்த நிகழ்ச்சியை சீக்கிரமா முடிச்சிங்கனா, முதல்வர் அதை போய் கவனிப்பாங்க !!! ( 2010 ஆம் ஆண்டு இளைஞன் இசை வெளியீட்டு விழாவில் அப்பொழுதைய முதல்வர் கலைஞரை வைத்துக்கொண்டு )
11) பொன்னர் ஷங்கர் இசைவெளியீட்டு விழாவில் முதல் நாள் கலைஞருடன் கலந்து கொண்டு விட்டு, மறுநாள் 2011 ஆம் ஆண்டு பொது தேர்தலில், அதிமுகவிற்கு ஓட்டு போட்டார் ரஜினி . ( அவர் யாரிடம் வேண்டுமானால் நெருக்கமாக இருப்பார். ஆனால் அதற்காக அவர்களுக்குதான் அவர் ஆதரவு தருவார் என்று நீங்கள் நினைப்பதில் அர்த்தமில்லை).
12) 2013 ஆம் ஆண்டு, தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா அவர்களை வைத்துக்கொண்டு கலைஞரை புகழ்ந்தார். அவர் பேசியது , " இந்த நேரத்துல நலிந்த கலைஞர்களுக்கு இடஒதுக்கீடு செய்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
13) 2008 ஆம் ஆண்டு ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆதரித்து பேசும் பொழுது, கர்நாடாகாவில் பிரச்னையில் ஈடுபடுவோரை உதைக்க வேண்டும் என்று கூறினார்( பிறகு இதற்கு வருத்தம் தெரிவித்தார்). கர்நாடகாவில் இருந்து மும்பை சென்ற ஒருவர், அநாகரிகமாக பேசுவதாக கண்டித்தார். ( அப்பொழுது மும்பையின் கவர்னராக இருந்த S.M. கிருஷ்ணாவை குறிப்பிடுகிறார்)
இதற்கு முன்பு இந்திய அளவில், சினிமா துறையில் உள்ள ஒருவர், இப்படி முதலமைச்சர்களுக்கு எதிராகவும், அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து இருக்கிறார் என்று உங்களால் கூற முடியுமா?? அதுதான் ரஜினி. ஆதலால், அவர் இதற்கு முன்பு யாரையும் எதிர்த்து பேசியது இல்லை என்று கூறுவதை விட்டுவிட்டு, உங்களது பொழைப்பை பார்த்தால் நன்றாக இருக்கும்.
இப்படிக்கு,
அ.அருள்செல்வன்
No comments:
Post a Comment