எனக்கு தோன்றியதை எழுதி உள்ளேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
பிறந்த நாள் கவிதை
எல்லா புகழும் இறைவனுக்கே என்றாய்! ஆனால் உன்னால்தான் இந்தியாவிற்கே புகழ்!
இளையராஜாவிற்குபின் பூத்த ரோஜாவே! தமிழக இளசுகளின் ராஜாவே!
உன்னைடைய இசையால் தென்றலையும் புயலாய் மாற்றிய இசை புயலே!
ஆஸ்கரே காலில் வந்து விழுந்தாலும் கண்ணியம் காக்கும் தலைமகனே! கோல்டன் க்லோப் வாங்கிய தங்க மகனே!
இந்தியாவிற்கு எப்போதோ சுதந்திரம் கிடைத்து இருக்கும் உன்னுடைய
வந்தே மாதரம் அப்பொழுது ஒலித்து இருந்தால்.
இந்தியாவிற்கு எப்போதோ சுதந்திரம் கிடைத்து இருக்கும் உன்னுடைய
வந்தே மாதரம் அப்பொழுது ஒலித்து இருந்தால்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் ஆனால் சாதுவாகிய நீ மிரண்டால் ஆஸ்கர் விருதுகள் கொள்ளாது.
புகழை தலைக்கு ஏற்றாத நவீன உலக சித்தன் நீ! நரம்புகளில் வயலின் வாசிக்கும் இசைப் பித்தன் நீ!
அன்றாடம் வானிலை மாறினாலும் விடாது பெய்யும் இசை மழை நீ!
இறுதியாக,
Inception இன் ஆஸ்கர் கனவை, கனவு உலகத்திற்கு அனுப்ப வந்த Mozart of Madras நீ!
வாழ்க நீ பல்லாண்டு.
No comments:
Post a Comment